இமைகள் திறந்த நாள் முதலாய்
ஆச்சரியப் படுத்துகிறது
புதிது புதிதாகக் கனவுகள்
சிலவற்றிற்கு
தொட்டில் கட்டுகிறேன்
சிலவற்றிற்கு
கட்டில் போடுகிறேன்
சிலவற்றை
பத்திரப் படுத்துகிறேன்
சிலவற்றை
பரணில் வீசுகிறேன்
சிலவற்றை
சிறிது சிறிதாக சேமிக்கிறேன்
சிலவற்றை
அவசரமாகக் கலைத்துப்போடுகிறேன்
சிலவற்றை
தலைமேல் சுமக்கிறேன்
சிலவற்றை
குப்பையில் கொட்டுகிறேன்
காயப்படுத்தினாலும்
கட்டியணைத்தாலும்
எதையும் கண்டுக்கொள்வதில்லை
கனவுகள் நான் தூங்கும் போது
இமைகளுக்குள் விழித்திருக்கிறது
நான் விழித்திருக்கும் போது
மனத்திரையில் உறங்குகிறது
அந்த நிழல்களின்
அன்புத் தொல்லையில்
அனுதினமும் ஆடத்தான் செய்கிறேன்
நிஜமாகிய நான்...
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
கவிதை