தொடரும் இஸ்ரேலிய கொலைகள்

தொடரும் இஸ்ரேலிய கொலைகள்


ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள வடக்கு நகரான நப்லஸில் பாலஸ்தீன இளைஞனை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றுள்ளன.

16 வயதான காயித் ரஃபீக் யாமின் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நப்லஸின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின் போதே யாமின் புதன்கிழமை அதிகாலை கொல்லப்பட்டுள்ளார். 

தலையில் சுடப்பட்ட யாமின், ஆபத்தான நிலையில் சுமார் 2 மணியளவில் (23:00 GMT) Nablus இல் உள்ள Rafidia பொது மருத்துவமனைக்கு வந்து 15 நிமிடங்களுக்குப் பிறகு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை இரவு நப்லஸ் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்துடனான மோதலின் போது குறைந்தது 80 பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர், இதில் 19 பேர் ரப்பர் தோட்டாக்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்தனர் மற்றும் 65 க்கும் மேற்பட்டோர் கண்ணீர்ப்புகை மூச்சுத் திணறலால் காயமடைந்தனர் என்று அதிகாரப்பூர்வ பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான Wafa தெரிவித்துள்ளது. 


Post a Comment

Previous Post Next Post