பூஜை அறையில்
குடிசை வீட்டில்
பண்டிகை தினத்தில்
நினைவு நாளில்
துலங்கும் தீபங்கள்
பார்வையை அழகாக்குகின்றன
இருளை கிழிக்கின்றன
மழலைகளோடு விளையாடுகின்றன
அச்சத்தை பயமுறுத்துகின்றன
காற்றை அசைக்கின்றன
வழியை நேராக்குகின்றன
அடையாளமாய் தெரிகின்றன
யாருடைய பார்வையிலும்
ஏனோ விழுவதில்லை
நெருப்பில் கருகி
ஒளிசிந்தும் திரிகள்...
உச்ச வலிகளோடு
கடைசி நாட்களை எண்ணியவாறு
வீட்டின் மூலைகளில்
நிராகரிக்கப்பட்டுக் கிடக்கிற
அப்பா அம்மாக்களின்
மறக்கப்பட்ட
தியாகங்களை போல...
வேட்டை
E-mail; vettai007@yahoo.com
Tags:
கவிதை
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteஇந்த இதழிலும் எனது கவிதை வெளிவந்திருக்கிறது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நீங்கள் வழங்கிவரும் வாய்ப்புகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்...
மிகவும் நேசமுடன்.
ஐ.தர்மசிங்