ஆசைதான்
ஆகாயமார்க்க பயணம்
அந்தரத்திலிருந்து
விழுந்துவிட்டால்
ஆசைதான்
அலைகளின் மேல் பயணம்
ஆழ்கடலில்
மூழ்கிவிட்டால்
ஆசைதான்
மகிழ்வுந்து பயணம்
நேருக்கு நேர்
மோதிவிட்டால்
ஆசைதான்
இருசக்கர வாகன பயணம்
அதல பாதாளத்தில்
நழுவிவிட்டால்
ஆசைதான்
பாதையில் நடைபயணம்
முதுகுக்கு பின்னால்
குத்திவிட்டால்...
மரணத்தின் நாழிகை
முன்பே தெரிந்தாலும்
மரணபயம் மட்டுமே
மனதில் நிலைத்தாலும்
அக்கணமே மரணிப்பது
அழகு...
ஆகாயத்தில் பறந்து போ
பறவையாக
மிதந்து பார்க்கலாம்
அலைகளில் மிதந்து போ
மீனாக
நீந்தி பார்க்கலாம்
மகிழ்வுந்தில் கடந்து போ
மனம்
புதுப்பிக்கப் படலாம்
இருசக்கர வாகனத்தில் பயணி
இன்பம்
கை கூடலாம்
அனுதினமும் நடந்து போ
ஆரோக்கியம்
நமதாகலாம்
நாளை என்பது நிச்சயமானதல்ல
ஒவ்வொரு நொடியும்
வாழ்ந்துவிடு...
பயப்படுவதைப் போல
நடித்து வாழ்ந்தாலும்
வாழ்வதைப் போல
நடித்து பயந்தாலும்
கருணைக் காட்டப் போவதில்லை
மரணம்...
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்...
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கவிதை