காலங்காலமாய்...!

காலங்காலமாய்...!


பாதத்தில்
குத்தி விடுகிறது முள்

கால் விரலில்
தட்டி விடுகிறது கல்

கையில்
வெட்டி விடுகிறது  கத்தி

விரலை 
நசுக்கி விடுகிறது கதவு

முழங்காலில்
பிளந்து விடுகிறது அரிவாள் 

தலையில்
இடித்து விடுகிறது வாசல்

கண்ணில்
கிழித்து விடுகிறது குச்சி

உள்ளங்கையில்
இறங்கி விடுகிறது ஊசி

சுண்டு விரலில்
சுட்டு விடுகிறது விளக்கு

நெற்றியில்
உரசி விடுகிறது கிளை

மனிதர்கள் மட்டும்
நல்லவர்களாகவே
வாழ்ந்து வருகிறார்கள்
காலங்காலமாய்...

ஐ.தர்மசிங்



 


Post a Comment

Previous Post Next Post