சாயல்!

சாயல்!


நீ
இதழ்களை பிரிக்காமல்
மென்மையாய் சிரித்திருக்கிறாய்
நீ
பற்கள் வெளிப்பட
மழலையாய் சிரித்திருக்கிறாய் 

நீ
கைகளால் மறைத்து
நையாண்டியாய் சிரித்திருக்கிறாய்
நீ
மனங்களை கவரும்
தெய்வீகமாய் சிரித்திருக்கிறாய்

நீ
ஓரப்பார்வை காட்டி
காதலாய் சிரித்திருக்கிறாய்
நீ
இதழ்களை விரித்து
ஆரவாரமாய் சிரித்திருக்கிறாய்

நீ
வெட்கத்தில் சிரிக்கையில்
மட்டும் தான் 
நிலைகுலைகிறேன் 
நான்

என்ன மாயம் செய்கிறாயோ
சகியே!
உன் வெட்க சிரிப்பு
எனக்கு 
வாசம் உதிர்க்கும்
வசந்தத்தின் சாயல்...

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்...



 


Post a Comment

Previous Post Next Post