இரத்த சகதியின் நடுவில்
ஒரு விபத்து
கடந்து போகிறேன்
கனத்த மனதோடு
பசி மயக்கத்தின் நடுவில்
ஒரு குழந்தையின் அமைதி
கடந்து போகிறேன்
" பாவம் " என்ற சொல்லை
உதிர்த்தபடி
ஆயுத தாக்குதலின் நடுவில்
ஒரு கதறல்
கடந்து போகிறேன்
" ஐயோ" வை வீசியபடி
நிர்வாணத்தை சுமந்தபடி
அதை உணரமுடியாத மனம்
கடந்து போகிறேன்
" கடவுளே " என கதைத்த படி
சூழ்ந்த நீரின் நடுவில்
ஒரு தத்தளிப்பு
கடந்து போகிறேன்
முன்னந்தலையில்
கையை வைத்தபடி...
அடிக்கடி வந்து போகும்
இந்த அனுதாபம்
என்னிடம் இருப்பதை விட
நலமாக இருக்கும்
இல்லாமல் போவது...
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்...
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்