அனுதாபங்கள்!

அனுதாபங்கள்!


இரத்த சகதியின் நடுவில்
ஒரு விபத்து
கடந்து போகிறேன்
கனத்த மனதோடு

பசி மயக்கத்தின் நடுவில்
ஒரு குழந்தையின் அமைதி
கடந்து போகிறேன்
" பாவம் " என்ற சொல்லை
உதிர்த்தபடி

ஆயுத தாக்குதலின் நடுவில்
ஒரு கதறல்
கடந்து போகிறேன்
" ஐயோ" வை வீசியபடி

நிர்வாணத்தை சுமந்தபடி
அதை உணரமுடியாத மனம்
கடந்து போகிறேன்
" கடவுளே " என கதைத்த படி

சூழ்ந்த நீரின் நடுவில்
ஒரு தத்தளிப்பு
கடந்து போகிறேன்
முன்னந்தலையில் 
கையை வைத்தபடி...

அடிக்கடி வந்து போகும்
இந்த அனுதாபம் 
என்னிடம் இருப்பதை விட
நலமாக இருக்கும் 
இல்லாமல் போவது...


ஐ.தர்மசிங்
நாகர்கோவில்...



 


Post a Comment

Previous Post Next Post