Ticker

6/recent/ticker-posts

ஆறு மாதங்களில் நடக்கவிருக்கும் சம்பவங்கள் பற்றி எச்சரிக்கும் நபர்

எதிர்காலத்தில் நடந்தேறும் நிகழ்வுகள் குறித்து எச்சரிக்கை விடுத்துவரும், தன்னை டைம் ட்ராவலர் என கூறிக்கொள்ளும் நபர் ஒருவர் அடுத்த ஆறு மாதங்களில் நடக்கவிருக்கும் சம்பவங்கள் தொடர்பில் எச்சரித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் டைம் ட்ராவலர் என தம்மை அறிமுகப்படுத்தியுள்ள எனோ அலரிக் என்பவர் ஏற்கனவே பல எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார். ஏலியன்கள் பூமிக்கு படையெடுக்கும் நாள் தொலைவில் இல்லை என குறிப்பிட்டுள்ள இவர், 2023 மே மாதத்திற்குள் 5 முக்கிய நிகழ்வுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தன்னை டைம் ட்ராவலர் என்பதை மக்கள் நம்ப மறுப்பது தெரியும் எனவும், ஆனால் இந்த ஐந்து முக்கிய நிகழ்வுகளையும் நினைவில் நிறுத்துங்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதில், உலகில் 10 பேர்கள் ஒரே நாளில் சூரியனின் உச்ச சக்தியை பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இது நவம்பர் 14, 2022ல் நடக்கும் எனவும், ஆனால் தாமதமாக வெளிவரும் என்றார்.

அடுத்ததாக பூமியின் பிரதிபலிப்பான ஒரு கிரகத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அடையாளம் காணும் என தெரிவித்துள்ளார். மூன்றாவதாக, 12 ஆண்டுகளாக மாயமான பயணிகள் விமானம் ஒன்று 2022 டிசம்பர் 12ம் திகதி பத்திரமாக தரையிறங்கும் எனவும், அந்த விமானப் பயணிகள் எவருக்கும் வயது மூப்பு பாதித்திருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2023 பிப்ரவரி மாதம் நான்கு இளைஞர்கள் அரிய கருவி ஒன்றை கைப்பற்றுவார்கள் எனவும், அதன்வாயிலாக விசித்திர காட்சிகளை காண்பார்கள் எனவும் எனோ அலரிக் என்ற டைம் ட்ராவலர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக 2023 மே மாதம் இதுவரை கண்டிராத மாபெரும் சுனாமி ஒன்று ஏற்படும் எனவும், கலிபோர்னியாவை மொத்தமாக அது தாக்கும் எனவும், சான் பிரான்சிஸ்கோ அழிந்துபோகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இவரது தகவலுக்கு பார்வையாளர்கள் பலர் கிண்டலடித்துள்ளதுடன், திரைப்படங்கள் பார்த்து மூளை மழுங்கிவிட்டதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். 



 


Post a Comment

0 Comments