ஆஸ்திரேலியா வரை எதிரொலித்த அதானியின் மோசடி.. ஆஸ்திரேலிய குடிமக்களின் ஓய்வூதியத்துக்கு பாதிப்பு !

ஆஸ்திரேலியா வரை எதிரொலித்த அதானியின் மோசடி.. ஆஸ்திரேலிய குடிமக்களின் ஓய்வூதியத்துக்கு பாதிப்பு !

அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியது. பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

அதேபோல் கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உதவியுடனே அந்த மோசடிகள் நடந்துள்ளது என பகிரங்கமாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு பல லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பங்குச்சந்தையை கண்காணிக்கும் செபி அமைப்பு விசாரணையை தொடங்குவதாக அறிவித்தது. அதோடு இந்திய ரிசர்வ் வங்கியும் அதானியால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தும் முன்னாள் நீதிபதி தலைமையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஜார்ஜ் சோரஸ் அதானியின் வீழ்ச்சி இந்திய அரசின் ஆட்சி மாற்றத்திற்கான, ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கதவை திறக்கக்கூடும் எனக் கூறியிருந்தார்.அதைத் தொடர்ந்து கெளதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் மூலம் ரஷியாவைச் சேர்ந்த விடிபி வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக பிரபல போர்ப்ஸ் பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது. இவர் பிற நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று அதை அதானி குழும பங்குகளில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகள் தொடர் சரிவின் காரணமாக, ஆஸ்திரேலிய பொதுமக்களும் ஓய்வூதிய சேமிப்பு நிதிகளைப் பாதித்துள்ளதாக பிரபல பிரிட்டன் பத்திரிகையான கார்டியன் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ஆஸ்திரேலியாவின் 243 டாலர் பில்லியன் ப்யூச்சர் பண்ட், காமன்வெல்த் வங்கியின் ப்யூச்சர் பண்ட் ஆகியவை அதானி நிறுவனங்களின் முதலீடு செய்துள்ளது.

மேலும், ஆஸ்திரேலிய மாகாணமான குயின்ஸ்லாந்தில் உள்ள அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடங்கி காமன்வெல்த் வங்கி ஊழியர்களின் ஓய்வூதியம் வரை அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதன் மதிப்புகள் கடுமையாக அடிவாங்கியிருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் கடுமையாக பதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post