டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது: அடுத்து கேஜ்ரிவால் என்கிறது பாஜக

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது: அடுத்து கேஜ்ரிவால் என்கிறது பாஜக

டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவந்தது.

மணீஷ் சிசோடியா மீதான ஊழல் வழக்கு விசாரணை பல மாதங்களாக நடந்துகொண்டிருந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அவரை சிபிஐ விசாரணைக்காக அழைத்திருந்தது.

சிபிஐ அலுவலகத்துக்கு செல்வதற்கு முன்பாக, தாம் இன்று கைது செய்யப்படலாம் என்று மணீஷ் கூறியிருந்தார். இந்நிலையில் விசாரணைக்கு சென்ற மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்.

மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இது பற்றி ட்வீட் செய்துள்ள பாஜக நிர்வாகி கபில் மிஸ்ரா, "கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று ஆரம்பம் முதலே நான் கூறிவந்தேன். இப்போது சத்யேந்தர் ஜெயினும், மணீஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டுவிட்டனர். அடுத்தது கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SOURCE;bbctamil


 



Post a Comment

Previous Post Next Post