Ticker

6/recent/ticker-posts

தன்முனைக் கவிதைகள்


பறவை பறந்தவுடன்
வானம் நிரப்பப்படுகிறது
மொத்த வானத்தையும்
உள்ளங்கையில் ஏற்கிறாள் மகள்

திசை தெரியாமல்
பறக்கிறது பறவை
பெண்ணாக பிறந்த்தால்
தொக்கிக் கொள்கிறது இக்கேள்வியும்

தூரமான எல்லைக்கல்
பயணத்திற்கு உகந்தது
மரவட்டை நகரும் அளவிற்கு
பொறுமையில்லை எனக்கு

விதை நட்டு நிமிர்கிறேன்
பழம் கையில் விழுகிறது
தொட்டிலை கட்டியும்
கருணை விழவில்லை வாழ்வில்

அன்பும் காதலும்
வானவில்லின் வண்ணமெனலாம்
மழை வராத காலத்தில்
சிறகடிக்கிறது வெறுப்புகள்

சே கார்கவி கார்த்திக்




 



Post a Comment

0 Comments