
ஆயிரம் பேர் அமரக்கூடிய மசூதியைக் கட்ட அஸிஸ் முன்பு விண்ணப்பித்திருந்தார். ஆனால், உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பு காரணமாக, அவர் தனது திட்டத்தை திரும்பப் பெற்றார்.
ஆயினும்கூட, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கவுன்சில் 390 வழிபாட்டாளர்கள் தங்கக்கூடிய மூன்று அடுக்கு மசூதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆதற்கமைய ‘பிக்காடிலி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசூதி இன்னும் சில மாதங்களில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘லண்டன் ட்ரோகாடெரோவின் ஒரு பகுதியை மாற்ற அஸிஸ் அறக்கட்டளை செய்த திட்டமிடல் விண்ணப்பம் மே 2023 இல் கவுன்சிலின் திட்டக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.’
மறுபுறம், பிக்காடிலி சர்க்கஸ் மற்றும் சோஹோவிற்கு இடையில் அமைந்துள்ள ட்ரோகாடெரோ, ஆரம்பத்தில் 1896 இல் ஒரு உணவகமாகத் திறக்கப்பட்டது. அதன்பின் 1965 இல் மூடப்பட்டது.
இதனையடுத்து கட்டிடம் 1984 இல் ஒரு கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு இடமாக மீண்டும் திறக்கப்பட்டது. 2011 இல் ட்ரோகாடெரோவின் ஒரு பகுதி அதற்கு முன் குறைக்கப்பட்டது. 2020 இல் ஒரு ஹோட்டலாக மீண்டும் திறக்கப்பட்டது.
அஸிஸ் அறக்கட்டளை மூலம் கட்டப்படும் இந்த மசூதி, அப்பகுதியில் பணிபுரியும் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமின்றி, லண்டனுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
சமீபத்திய ஆண்டுகளில், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் லண்டனில் அதிகரித்து வருகின்றமை யும் கவனிக்கத்தக்கது.
2022 ஆம் ஆண்டில் மட்டும், முஸ்லிம்களைக் குறிவைத்து, காவல்துறையினரால் பதிவுசெய்யப்பட்ட மத வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 3,459 ஆகும், இது முந்தைய ஆண்டை விட 42% அதிகமாகும்.
SOURCE:newsnow
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments