விடை: தம் மக்களை, கற்றோர் முன் கற்றவராய் இருக்கச் செய்தல்
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்,(67)
97.வினா : ஒரு தாய் எப்போது மகிழ்வாள்?
விடை: தன் மகனைச் சான்றோன் எனக் கேட்கும் போது
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.(69)
98.வினா : மகனின் கடமை யாது?
விடை: இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ எனக் கேட்கும்படி இருத்தல்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல்,(70)
99.வினா : அன்பை எது வெளிப்படுத்தும்?
விடை: அன்புடையாரது கண்ணீர்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்.(71)
100.வினா : எல்லாம் எனக்கே என வாழ்பவர் யார்?
விடை: அன்பில்லாத சுயநலவாதிகள்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.(72)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்