2024 ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட கொலராடோ உச்சநீதிமன்றம் தடை

2024 ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட கொலராடோ உச்சநீதிமன்றம் தடை


2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ(Colorado) உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அரசியலமைப்பின் கிளர்ச்சி என்ற வாக்கியத்தை குறிப்பிட்டுக்காட்டி, ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் அல்லவென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எவ்வாறாயினும் இந்த தீர்ப்பு மீதான மேன்முறையீடு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தீர்ப்பு கொலராடோ மாநிலத்திற்கு வௌியே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுப்பதற்கு பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

newsfirst


 



Post a Comment

Previous Post Next Post