என்னை விட்டு
விலகியதற்காக
உனக்குள்ளே
நிம்மதி பெருமூச்சு
விட்டுக் கொள்வாய்
எனக்காக
தொலைத்த நாட்களுக்காக
உன்னையே
நொந்து கொள்வாய்
எனக்காக
செலவழித்த புன்னகைகளுக்காக
உன் இதழ்களை
கடிந்து கொள்வாய்
எனக்காக
எழுதிய கடிதங்களுக்காக
உன் விரல்களோடு
மோதிக்கொள்வாய்
என்னை
பிரிந்து விட்டதற்காக
நீ மகிழும் போதும்
என்னிடம்
அன்பு பாராட்டியதற்காக
நீ வருந்தும் போதும்
உன்னை நீ கவனித்து பார்
உன் கூடவே நானிருப்பேன்
நினைத்தவுடன்
கழற்றியெறிவதற்கு
ஆடையல்ல காதல்
கற்சிற்பம் போல
இரு இதயங்கள் செதுக்கும்
மகா உன்னதம்
உன்னையே நீ
ஏமாற்றிக்கொள்
அது உன் சுதந்திரம்
மரணத்தின் நாழிகை
படரும் வரை
என்னோடு தொடரும்
உன் ஞாபகம்
இரண்டாம் நிழலாக.
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கவிதை
வணக்கம் சார்.
ReplyDeleteஎனது கவிதையை சிறப்பாக வெளியிட்டதற்காக இதயம் நிறைந்த நன்றிகள்.
ஐ.தர்மசிங்