இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்துவர இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் இதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்து, தேசிய அளவில் கவனம் பெற்றன.
மேலும் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஆடை கட்டுப்பாடுகள் செல்லும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேரும் மாறுபட்ட தீர்ப்புக்களை அளித்தனர். அதாவது, உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என ஒரு நீதிபதியும், செல்லாது என ஒரு நீதிபதியும் தீர்ப்பளித்தனர்.
இந்த சூழலில், எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ಪ್ರಧಾನಿ @narendramodi ಅವರ ಸಬ್ ಕಾ ಸಾಥ್-ಸಬ್ ಕಾ ವಿಕಾಸ್ ಎನ್ನುವುದು ಬೋಗಸ್. ಬಟ್ಟೆ, ಉಡುಪು, ಜಾತಿ, ಆಧಾರದ ಮೇಲೆ ಜನರನ್ನು ವಿಭಜಿಸುವ, ಸಮಾಜವನ್ನು ಒಡೆಯುವ ಕೆಲಸವನ್ನು @BJP4India ಮಾಡುತ್ತಿದೆ. ಹಿಜಾಬ್ ನಿಷೇಧವನ್ನು ವಾಪಾಸ್ ಪಡೆಯಲು ತಿಳಿಸಿದ್ದೇನೆ.#Hijab pic.twitter.com/EIHU5V7zas
— Siddaramaiah (@siddaramaiah) December 22, 2023
நிகழ்ச்சி ஒன்றிலும் இது குறித்து சித்தராமையா உரையாற்றினார். அப்போது பேசியதாவது:-
பெண்கள் ஹிஜாப் அணிந்து இனி வெளியே செல்லலாம். முந்தைய உத்தரவை திரும்பப் பெறுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். உணவு உண்பது அவரவர் விருப்பம், நான் ஏன் ஆட்சேபனை செய்ய வேண்டும்? நீங்கள் விரும்பும் உடையை அணியுங்கள், நீங்கள் விரும்பியதை சாப்பிடுங்கள், நான் ஏன் அதுகுறித்து கவலைப்பட வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் செய்யக்கூடாது, நாங்கள் அதைச் செய்ய மாட்டோம்.
மேலும், அனைவருக்குமான வளர்ச்சி என பிரதமர் மோடி கூறுவது ஏமாற்று வேலை. ஆடைகள், சாதி உள்ளிட்டவை அடிப்படையில் சமூகத்தையும், மக்களையும் பாஜக பிளவுபடுத்துகிறது. இவ்வாறு சித்தராமையாக கூறினார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
இந்தியா