திருடப்பட்ட தங்கக் கழிப்பறைத் தொட்டி.. குற்றத்தை ஒப்புக்கொண்ட முதல் ஆடவர்

திருடப்பட்ட தங்கக் கழிப்பறைத் தொட்டி.. குற்றத்தை ஒப்புக்கொண்ட முதல் ஆடவர்


பிரிட்டனில் 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறைத் தொட்டியைத் திருடியதாக ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

39 வயது ஜேம்ஸ் ஷீன் (James Sheen) உட்பட 4 பேர் அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இதுவரை ஜேம்ஸ் மட்டும்தான் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கழிப்பறைத் தொட்டியின் மதிப்பு 6 மில்லியன் டாலருக்கும் அதிகம் என்று CNN செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்ட்டன் சர்ச்சில் (Winston Churchill) பிறந்த வீட்டில் அந்தத் தொட்டி இருந்தது.

நன்கு செயல்பட்ட அது 2019ஆம் ஆண்டில் இத்தாலியக் கலைஞர் ஒருவரின் கண்காட்சியில் இடம்பெற்றது.

கண்காட்சி தொடங்கிய சில நாள்களிலேயே தொட்டி களவாடப்பட்டது.

அதனுடன் இணைக்கப்பட்டிருந்த தண்ணீர்க் குழாய்கள் பாதிக்கப்பட்டன.

அந்த இடத்தில் வெள்ளமும் ஏற்பட்டது.

seithi


 



Post a Comment

Previous Post Next Post