ஐ.நா.வுக்குள் நுழைந்த பாலஸ்தீனம்!

ஐ.நா.வுக்குள் நுழைந்த பாலஸ்தீனம்!


இப்பொழுது பாலஸ்தீனத்தை ஐ.நா. அங்கத்துவத்தில் சேர்ந்துகொள்ளத் தகுதிபெற்ற நாடாக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அறிவிப்புச் செய்ததையடுத்து, பாலஸ்தீனிய சுயநிர்ணய உரிமை, இருப்பு மற்றும் அதன் எதிர்காலத்திற்காக முன்னெடுப்புக்குள் நுழைந்துள்ளது!

கடும் பிரயத்தனத்தின் மத்தியில், நீதிக்கான போராட்டத்தில் மனிதநேயத்தின் பக்கம்  ஐ.நா. சரிந்துள்ளது. பாலஸ்தீனுக்கு கிடைத்த இந்த வெற்றி அமெரிக்காவுக்கு எதிராக உலகம் நிற்கின்றது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தில் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் ஐ.நா. அமைப்பில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா கடந்த 2024 ஏப்ரல் 18 நிராகரித்தது.

இம்முறை அமெரிக்காவுடன் சேர்ந்து அர்ஜென்டினா, செக் குடியரசு, ஹங்கேரி, இஸ்ரேல், மைக்ரோனேசியா, நவ்ரு, பபுவா, பபுவா நியூ கினி ஆகிய எட்டு நாடுகள் பாலஸ்தீனம் ஐ.நா.வின் அங்கத்துவம் பெறுவதற்கு எதிராக வாக்களித்தன.

ஆனால் பின்வரும் 25 நாடுகள் இரண்டுங் கெட்டான் நிலையில் இருப்பதாலும், நீதியின் பக்கம் சாய்வதற்குப் பயப்படுவதாலும் 
அல்பேனியா, ஆஸ்திரியா,பல்கேரியா, கனடா, குரோஷியா, பிஜி, பின்லாந்து ஜார்ஜியா, ஜெர்மனி, இத்தாலி, லதுவியா, லிதுவேனியா, மலாவி, மார்ஷல் தீவுகள், மொனாக்கோ, நெதர்லாந்து, வடக்கு மசிடோனியா, பராகுவே, மால்டோவா குடியரசு, ருமேனியா, ஸ்வீடன்,, சுவிட்சர்லாந்து, உக்ரைன், ஐக்கிய இராச்சியம், வனவடு போன்ற நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை!

193 உலக நாடுகளில் இந்தியா, ஸ்ரீலங்கா, அவுஸ்திரேலியா  உட்பட 143 நாடுகள் பாலஸ்தீனத்துக்குத் தமது ஆதரவைத் தெரிவித்து வாக்களித்து, பாலஸ்தீனத்தை ஐ.நா.வுக்குள் நுழையச் செய்துவிட்டமை பெருமைப்படத்தக்க ஒரு விடயமாகும்!

செம்மைத்துளியான்


 



Post a Comment

Previous Post Next Post