
216.வினா:யாரிடம் வஞ்சகம் நிலைத்து நிற்கும்?
விடை:திருட்டு மனம் உள்ளவரிடம்
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.(288)
217.வினா:வாய்மை எனப்படுவது யாது?
விடை: தீமை தராத சொற்கள்
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.(291)
218.வினா:பொய் கூட உண்மையாவது எப்போது?
விடை: குற்றமில்லாத நன்மை தரும் நிலையில்
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.(292)
219.வினா:தன்னெஞ்சே சுடும் எப்போது?
விடை:மனமறியப் பொய் பேசினால்
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.(293)
220.வினா:உலக மக்கள் உள்ளத்தில் வாழும் நிலை வரும் எப்போது?
விடை: மனமறிய பொய் பேசாமல் வாழும் நிலையில்
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.(294)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments