திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -51

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -51


குறள் 1252
காமம் எனவொன்றோ கண்ணின்றென்
நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில்.
 
எனக்கு இப்ப எட்டு வயசு!
கலைமதிக்கு ஆறு வயசு!
கலைமதி உயிர்த்தோழியா மாறிட்டா!
அவள கொஞ்சநேரங்கூட
நெனக்காம இருக்கமுடியல.
சரி, பகல் பொழுதுதான்
இப்படி என்றால்
நள்ளிரவு நேரத்துல கூடவா
இரக்கமே இல்லாம
நெஞ்சுல நினைவலைகளை
எழுப்பிக்கிட்டே இருக்குறது?
 நட்புவேட்கை கொடியதுதான்.
 
குறள் 1253
மறைப்பேன்மன் காமத்தை யானோ
குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்.
 
அம்மாடி!
ஏம்மா பள்ளிக்கூடத்துல
வந்ததுலஇருந்து
ஒருமாதிரி இருக்க!
ஒண்ணுமில்லம்மா!
சும்மாத்தான் இருக்கேன்!
உன்னப்பாத்தா
அப்படித் தெரியல!
என்னமோ போ !
சே! பள்ளித் தோழியோட
சண்டபோட்டு வந்துட்டேன்!
இந்த நட்பு உணர்ச்சிய
எவ்வளவுதான்
அடக்க முயன்றாலும்
நம்மையும் மீறிவர்ர
தும்மல்மாதிரி
வெளிப்படுதே!
இப்படிக்காட்டிக்
கொடுக்குதே!
(தொடரும்)

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post