உடல் உறுப்புகளை துண்டித்து கொடூரம் : இஸ்ரேல் இராணுவம் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை

உடல் உறுப்புகளை துண்டித்து கொடூரம் : இஸ்ரேல் இராணுவம் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை


காஸாவில் (Gaza) பலஸ்தீனியர்களை இஸ்ரேலிய (Israel) இராணுவம் திட்டமிட்டு கொலை மற்றும் மனித தன்மையற்ற சித்திரவதைகளில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை ஐ.நா.விசாரணைக்குழு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்னாள் தலைவருமான நவநீதம்பிள்ளை (Navanethem Pillay) தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில், காஸாவிலுள்ள பலஸ்தீனியர்களை முற்றாக கொன்றழிக்க இஸ்ரேல் முயன்றதாக அந்த குழுவின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, இஸ்ரேலிய இராணுவத்தினர் காஸா பெண்களை தவறான முறையில் சித்திரவதை செய்ததோடு, பலஸ்தீனிய (Palestine) ஆண்கள் மற்றும் இளைஞர்களை  துன்புறுத்தியதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தலைகளை துண்டித்தல், உடல் உறுப்புகளை துண்டித்தல், நிர்வாணப்படுத்துதல் மற்றும் இறந்தோரின் உடல்களுக்கு அவமரியாதை செய்தல், எரித்தல் போன்ற செயல்களில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறியதோடு, இஸ்ரேல் இராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளதாகவும் ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹமாஸ் இயக்கத்தினரும் போர் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டி இருக்கும் ஐ.நா.விசாரணைக்குழு தனது அறிக்கையை அடுத்த வாரம் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ibctamil


 



Post a Comment

Previous Post Next Post