மீண்டும் தென்னாபிரிக்கா அதிபரானார் சிறில் ரமபோசா

மீண்டும் தென்னாபிரிக்கா அதிபரானார் சிறில் ரமபோசா


தென்னாபிரிக்காவின் (South Africa) அதிபராக சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (African National Congress) கட்சிக்கும் எதிர்க்கட்சிகளிற்கும் இடையிலான முக்கிய கூட்டணி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த தெரிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் ஊடாக சிறில் ரமபோசா மீண்டும் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் நலனுக்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசா தமது உரையில் தெரிவித்துள்ளார்.

ibctamil


 



Post a Comment

Previous Post Next Post