மாஸ்கோ:ரஷ்யாவைத் தாக்கிய உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதைப் போல மேலை நாடுகளின் எதிரிகளுக்கும் ஆயுதங்கள் விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய நாட்டிற்கு எதிராக பயன்படுத்தப்படும் தொலைதூர ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் அளித்து வருகின்றன. அந்த ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்தலாம் என்றும் சில நாடுகள் கூறி வருகின்றனர்.
இதே சூழல் நீடித்தால் மேலை நாடுகளின் பிராந்தியங்களைச் சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்குவோம் என்று புதின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக உக்ரைன் ரஷ்ய போர் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு நேரடியாக அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனால் ரஷ்யாவைத் தாக்க மேலை நாடுகள் முடிவெடுத்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்