மோசமான வரலாற்று சாதனையை பதிவு செய்த மைத்திரி

மோசமான வரலாற்று சாதனையை பதிவு செய்த மைத்திரி


மக்களின் மனித உரிமைகளை மீறியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 103 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டியுள்ளதாக பிரித்தானிய வானொலியான பிபிசி தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, மனித உரிமைகளை மீறியதற்காக அதிக முறை தண்டிக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி என்ற சாதனையை மைத்திரிபால சிறிசேன மட்டுமே படைத்துள்ளார்.

இதுபோன்ற 3 வழக்குகளில், 2 வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட அவருக்கு103 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில், சட்டவிரோதமாக நாடாளுமன்றத்தை கலைத்த வழக்கு, ஈஸ்டர் தாக்குதல் வழக்கு மற்றும் ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு மன்னிப்பு வழங்கிய வழக்கு ஆகிய மூன்று வழக்குகளில் இரண்டில் இந்த இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

lankatruth


 



Post a Comment

Previous Post Next Post