காங்கேயம் திருப்பூர் மாவட்டத்தில்,முத்தூர் செட்டியார் பாளையத்தில் பாரதரத்னா கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்தநாள் விழா மற்றும் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா என இருபெரும் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு அய்யாதுரை தலைமை தாங்கினார்.
கல்லூரி செயலாளர் திரு.பழனிசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரியின் தாளாளரும்,மதுரை நாடார் மகாஜன சங்கத்தின் தலைவர் G.கரிகோல்ராஜ் அவர்களும்,அருங்குறள் ஆசான் தமிழ்ச் செம்மல் முனைவர் அன்வர் பாட்சா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்குப் பரிசுகள் வழங்கி, திருக்குறள் தூதர் முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்கள் எழுச்சிமிகு உரையாற்றினார். கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
நிறைவாக பரதநடனக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் காமராசர் அவர்கள் நன்றி நவில,தமிழ்த் துறைத் தலைவர் உதயசூரியன் விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.
விழாக்குழுவினர் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
தமிழ்நாடு
His enthusiastic and energetic speech remains an inspiration among our students. Thank you sir
ReplyDelete