திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -55

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -55


குறள் 1264
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் 
கோடு கொடேறுமென் நெஞ்சு.

அக்கா அக்கா 
இன்னக்கி 
நம்ம தாத்தாவும் பாட்டியும் 
ஊரில் இருந்து வராங்க! 
போயி பத்துநாளாச்சு! 
அவங்க வரப்போறாங்கனு 
நெனச்சு 
என்னோட மனசு 
மரக்கிளைகள் 
படர்வதைப் போல 
மகிழ்ச்சியில் படர்ந்து 
துள்ளுகிறது! 
என்னமோ நீசொல்ற 
நான்கேட்டுக்கிறேன்
செல்லம்!

குறள் 1265
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் 
கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு.

அம்மா!
எதுத்தவீட்டு
மங்களா ஊருக்குப் 
போயிருக்காம்மா! 
அவங்க அம்மாகிட்ட 
போயி கேட்டா 
இன்னக்கி வருவா 
நாளக்கி வருவான்னு 
சொல்றாங்கம்மா! 
நானும் பள்ளிக்கூடம் விட்டு 
வரும்போதெல்லாம் 
தினமும் கேக்குறேன்! 
இன்னும்வரல! அவள என்னக்கி 
நேராப்பாக்குறேனோ 
அன்னக்கிதாம்மா 
ஏக்கம், சோர்வெல்லாம் 
நீங்கி மகிழ்ச்சியா இருப்பேம்மா!

குறள் 1266
வருகமன் கொண்கன் ஒருநாள் 
பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட.

என் பள்ளித்தோழி 
செல்வியே! 
என் உயிர்த்தோழி 
அன்பரசி 
இன்று வருகின்றாள்! 
அவள் வரட்டும்!
இத்தனை நாள் பேசாத 
பேச்சையெல்லாம் 
பேசித்தீர்க்கின்றேன் பார்! 
அன்பைப் பொழிந்து 
மகிழ்கின்றேன் பார்!
மெய்மறந்து 
நட்பில் 
களிக்கின்றேன்பார்!

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post