பாம்பைத் திருப்பிக் கடித்துக் கொன்ற இந்தியர்

பாம்பைத் திருப்பிக் கடித்துக் கொன்ற இந்தியர்


இந்தியாவின்  பீகார் (Bihar) மாநிலத்தில் சந்தோஷ் லொஹார் (Santosh Lohar) என்பவரைப் பாம்பு ஒன்று கடித்தது. 

பதிலுக்கு அவர் பாம்பை இருமுறை கடித்துக் கொன்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. 

லொஹார் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர் உயிர்பிழைத்தார்.

ஆனால் லொஹாரைக் கடித்த பாம்பு இறந்ததாகக் கூறப்படுகிறது. 

லொஹார் ராஜொலி (Rajouli) காட்டில் ரயில்வே திட்டம் தொடர்பிலான பணியில் ஈடுபட்டிருந்தார். 

அவர் படுக்கச்சென்றபோது சம்பவம் நடந்தது. 

"எனது கிராமத்தில், பாம்பு நம்மைக் கடிக்கும்போது அதனைத் திருப்பி இருமுறை கடித்தால் விஷம் ஏறாது எனும் நம்பிக்கை உள்ளது," என்று லொகார் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்தார். 

seithi


 



Post a Comment

Previous Post Next Post