கடந்த மாதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் இன்று மீண்டும் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலின் வட பிராந்தியத்தின் சிசேரியா நகரில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலை யாரும் பொறுப்பேற்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தாக்குதல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.




 Ai SONGS