Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-69


350. வினா : துன்பம் கண்டு செய்ய வேண்டியது எது?
விடை: சிரிப்பது
இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்.(621)

351. வினா : துன்பத்திற்குத் துன்பம் செய்பவர் யார்?
விடை : துன்பத்தைக் கண்டு துன்புறாதவர் 
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்.(623)

352. வினா : யாருக்கு வந்த துன்பம் துன்பப்படும்?
00 விடை : மனம் கலங்காதவனின் துன்பம் 
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும்.(625)

353. வினா : யார் துன்பம் உறுதல் இல்லை?
DAS விடை : துன்பம் இயல்பானது என நினைப்பவர் 
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்.(628)

354. வினா : பகைவரும் விரும்பும் சிறப்புடையவன் யார்?
விடை: துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கொள்பவன் 
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு.(630)

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments