Ticker

6/recent/ticker-posts

பலத்த காற்று, புயலுக்கு மத்தியில் விமானத்தைத் தரையிறக்கிய மலேசிய விமானிக்குக் குவியும் பாராட்டு


பலத்த காற்று, புயலுக்கு மத்தியில் ஏர்பஸ் A350 - 900 விமானத்தை லண்டன் ஹீத்ரோ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறக்கிய மலேசிய விமானிக்கு அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

டார்ராக் புயல் பலமாக வீசியப் போதும் சற்றும் நிலைக்குலையாமல் அந்த விமானத்தைப் பாதுகாப்பாக விமானி தரையிறக்கினார். 

பலத்த காற்று குறுக்கே வீசும்போது அதனை நேரடியாக எதிர்கொண்டு விமானி முன்னோக்கிச் சென்று விமானத்தை  விமானி தரையிறக்கினார். 

இதற்கு crabbing முறை என்று பெயரிடப்பட்டுள்ளது. 

பெயர் குறிப்பிடப்படாத மலேசிய விமானியின் திறனை காட்டும் அந்தக் காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் பலர் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments