Ticker

6/recent/ticker-posts

இனியவை நாற்பது-3


இனியவை நாற்பது-5

கொல்லாமை முன்னினிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்னினிது செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
பொலலாங்(கு) உரையாமை நன்கு.

விளக்கம்:

எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பது இனிது.

நடுவு நிலையோடு இருந்து, தகுதி இல்லாதவர்களைப் பாராட்டாமல் இருப்பது இனிது.

ஆட்சியாளன் நல்லாட்சி தருவது இனிது.

யாரிடமும் பிறரைப் பற்றி குற்றம் கூறாமல் இருப்பது இனிது.

இனியவை நாற்பது -6

ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்னினிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது.

விளக்கம்:

முடிந்த அளவு மற்றவர்களுக்குத் தர்மம் செய்வது இனிது.

நல்ல நெறி முறையோடு வாழ்பவர்கள் சொல்லும் சிறந்த கருத்து இனிது.

வலிமையுடன் இருப்பவர்கள், அப்படி இல்லாத மக்களுக்குத் துணையாக இருந்து அவர்களைக் காப்பது இனிது.


(தொடரும்)

 


Post a Comment

0 Comments