
ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரில் சர்க்கஸ் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த வலை திடீரென சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த எதிர்பாராத விபத்தால் அதிர்ச்சியடைந்த மூன்று புலிகளில் ஒன்று, ஆக்ரோஷமாகப் பாய்ந்து பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் நுழைந்ததால் மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓடினர்.
அந்தப் புலி தடையைத் தாண்டிப் பாய்ந்ததும் அங்கிருந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைப் பாதுகாப்பாக அணைத்துக்கொண்டனர். நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க, பார்வையாளர்களை அமைதியாக இருக்குமாறு பயிற்சியாளர்கள் கூச்சலிட்டனர்.
இருப்பினும், பீதியடைந்த மக்கள் உடனடியாகக் கூடாரத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். நல்வாய்ப்பாக, இந்தச் சம்பவத்தில் பார்வையாளர்களுக்கோ அல்லது சர்க்கஸ் ஊழியர்களுக்கோ எவ்வித உடல் காயம் ஏற்படவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கூடாரத்திலிருந்து தப்பிய அந்தப் புலி, அருகில் இருந்த சாலைக்கு ஓடியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், புலியைக் லாவகமாகப் பிடித்து மீண்டும் கூண்டிற்குள் அடைத்தனர்.
முன்னதாக, இத்தாலியின் ரோம் நகரில் இதேபோல் சிங்கம் ஒன்று தப்பித்துச் சாலைகளில் பல மணிநேரம் சுற்றித் திரிந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் சர்க்கஸ் கூடாரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments