Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-42


குறள் 206:

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.

தீச்செயல் தன்னை வருத்துமென்றால் அச்செயலை மாற்றார்க்கும் செய்தல் தவிர்.

குறள் 207:

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும்.

கணைபோன்ற நேர்ப்பகைக்குத் தப்பலாம்! தீய வினைப்பகைக்குத் தண்டனை உண்டு.

குறள் 208:

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று.

தீமைசெய்தல், ஒட்டி இருக்கும் நிழல்போல தீயோரை ஒட்டிநிற்கும் தீங்கு.

குறள் 209:

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால்.

தன்வாழ்வை வாழ நினைப்பவன் தீயசெயல் தன்னை விரும்பமாட்டான் செப்பு.

குறள் 210:

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.

முரடன்தான்! கேடுசெய்ய வில்லையென்றால் தீமை நெருங்கா தவர்க்கென்றே நம்பு

(தொடரும்)


 


Post a Comment

0 Comments