Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-44


குறள் 216:

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.

கருணைமனங் கொண்டவரின் செல்வம் பழுத்த மரமொன்று ஊர்நடுவே போல்.

குறள் 217:

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.

பெருந்தன்மை யாளனின் செல்வம் மருந்து மரம்போல் பயன்படும் சொல்.

குறன் 218:

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்.

உதவ முடியாத போதும் உதவத் தயங்கமாட்டார் ஏழைக்குத் தான்.

குறள் 219:

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு.

உதவ முடியவில்லை என்றே வருந்தும் மனமுடையோன் ஏழ்மை நிலை.

குறள் 220:

ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து.

ஒப்புரவால் கேடுவரும் என்றால் தனைவிற்றும் அக்கேட்டை வாங்குதல் நன்று.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments