
"வைகோ, எங்கள் தலைவர் விஜயின் காலடியில் விழுந்துகிடக்கிறார்” என நாஞ்சில் சம்பத் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“அரசியல் மாற்றத்திற்காக வந்த வைகோ, இன்று எங்கள் தலைவர் விஜயின் காலடியில் விழுந்துகிடக்கிறார்” என தவெகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியிருப்பது அக்கூட்டணிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், மதிமுக ஆகியவை திமுக கூட்டணியை முறித்துக்கொண்டு, தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளன.
தவெக கூட்டணியில் இணைந்ததைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவான கருத்துகளையும், திமுகவுக்கு எதிரான கருத்துகளையும் பதிவு செய்துவருகிறார்.
குறிப்பாக கடந்த 17ஆம் தேதி வைகோ தனது எக்ஸ் பக்கத்தில், “கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, திமுகவையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியிலிருந்து அவர்களே விலக்கியிருப்பார்கள். என் வாழ்க்கையில் இரண்டு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன்.
ஒன்று 2006 இல் அண்ணா திமுகவுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய மதிமுக தலைமை நிர்வாகிகள், முன்னணியினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அதிமுக பொதுச்செயலாளரை சந்திக்க வைத்தார்களே, நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், அதிமுகவுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் நமது இயக்கம் வலிவும் பொலிவும் பெற்றிருக்கும். 2017 இல் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு கொண்டது இரண்டாவது பெரும் பிழையாகும்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் நாஞ்சில் சம்பத், “ஆட்சி, அரசியல் மாற்றம் வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் கனவு.
1994ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி அரசியல் மாற்றத்திற்கு அகரம் எழுதினார் வைகோ. ஆனால், அவராலேயே அதனை செய்ய முடியவில்லை. இன்று அவர் எங்கள் கட்சித் தலைவர் விஜயின் காலடியில் வந்து விழுந்துகிடக்கிறார்” என பேசியுள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments