
தாய்லாந்து நாட்டின் புக்கெட்டிலிருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கி புறப்பட்ட AI2379 ஏர் இந்தியா ரக விமானம் கடுமையான காற்று கொந்தளிப்பில் சிக்கியது.
இந்த சம்பவத்தை அடுத்து விமானம் வேகமாக குலுங்கிய வேளையில் விமான பயணத்தில் இருந்த 17 பயணிகள் பலத்த காயங்களுக்கு இலக்கானதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இருப்பினும், விமானம் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் சுமார் 300 அடி உயரத்தை திடீரென இழந்ததாக கூறப்படுகிறது. இந்த அதிர்வால் சில பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு தரையிறங்கிய உடனேயே மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, சிலர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments