
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், யாழ்ப்பாணம் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 8 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில், அவர்களில் 5 பேர் ஜனாதிபதிக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட அந்த 8 பேரில் 5 பேர் இந்தியப் பிரஜைகள் என்றும், அந்த ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments