
நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ சார்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து வரும் அவரது இரண்டு சட்டத்தரணிகள் பல்வேறு முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிள்ளையானின் சட்டத்தரணியாக முன்னிலையாகிய உதய கம்மன்பில, எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான தரகுப் பணத்தை நிமல் பெரேரா உள்ளிட்ட சிலர் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும், அந்தப் பணத்தில் ஒரு பகுதி நாமல் ராஜபக்ஷவுக்கு பரிசாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நேற்று முன்தினம் (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி சாகர காரியவசம், எந்தவொரு குற்றவாளிக்கும் தனது தவறைத் திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களது இந்தக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் முன்னிலையில் நாமல் ராஜபக்ஷ தாம் குற்றவாளி என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படக்கூடும்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments