
இவர்களின் நிலை என்ன ?இவர்கள் நரகவாதிகளா ?சுவனவாதிகளா ? என்று தான் செய்யும் பித்அத்துகளை தொடர்ந்து செய்வதற்கு சில ஸஹாபாக்களை கேடயமாக காட்டுகிறார்கள்.
இந்த கேள்வி நியாயமானதாக இருந்தாலும் ஸஹாபாக்களின் நிலையை சரியாக புரிந்து கொண்டால் இப்படியான கேள்விகளை கேட்க மாட்டார்கள். இப்படி கேள்வி கேட்பதே தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் பித்அத் சம்பந்தமாக எச்சரிக்கப்பட்ட ஹதீஸ்களை கவனியுங்கள்.
“இஸ்லாத்தில் புதிதாக (ஒன்றை) உருவாக்குவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன். ஏனென்றால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், அனைத்து பித்அத்தும் வழிகேடாகும், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
மேலும் “யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மேலும் ”எனக்கு முன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களுக்கும், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நபியினுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்தத் தோழர்கள் செய்யாததை செய்ததாகச் சொல்வார்கள், அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். இதன் பின்னர், ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது”, என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
ஆதாரம் : இப்னு மஸ்ஊத்(ரழி), நூல் : முஸ்லிம்
மேலும் “வார்த்தையில் சிறந்தது அல்லாஹ் வின் வேதமாகும். நடைமுறையில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறை, காரியங்களில் கெட்டது (நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாத) “பித்அத்’கள். “பித்அத்’கள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத்(ரழி), ஜாபிர்(ரழி), நூல்கள் : புகாரீ, முஸ்லிம், நஸாயீ.
மேலும் “எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது” என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர் : அலீ(ரழி), நூல் : அபூதாவூது, நஸாயீ. இப்படி பல ஹதீஸ்களை காணலாம்.
மேற்ச் சென்ற அனைத்து ஹதீஸ்களை உள்ளடக்கியதாக பின் வரும் குர்ஆன் வசனமும் எச்சரிப்பதை அவதானிக்கலாம்.
“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.(33- 36)


0 Comments