காத்திருக்கிறேன்!

காத்திருக்கிறேன்!


காத்திருக்கிறேன் நான்  
கனவோடு பூத்திருக்கிறேன்
சேர்த்திருக்கிறேன் காதல் 
பூச்செண்டு கோர்த்திருக்கிறேன்
வேர்த்திருக்கிறேன் மூக்குநுனி
சேர்த்திருக்கிறேன் நினைவுகள்
பார்த்திருக்கிறேன் பாதை 
நோக்குகிறேன் எந்நாளும்
கண்ணாளனே கவிதைக்கான 
கருத் தந்தவனே
எங்கிருக்கிறாய் வந்துவிடு 
வாரியே அணைக்க
செந்தமிழும் மொழியும்போல 
சேர்ந்து இருக்கத்தான்
சீரும் சிறப்போடும் 
வாழ்ந்து பார்க்கத்தான்
சோடிப்புறா ஒத்தையிலே 
நிக்குது சீமானே
சோகத்தோடு கண்ணீர் 
வடிக்குது மாமனே
கள்வனே,கரும்பென 
இனிக்கும் மாயவனே
விட்டுப் போகாதே 
விடலையை நோகடிக்காதே
விடியலுக்காய் ஏங்கும் 
இரவாய் விம்முகிறேன்
கதிரவனாய் செங்கமலம் 
மலர்ந்திடவே வருவாயோ
கைப்பிடித்தே மலர் 
மாலையெனச் சேர்வாயோ




1 Comments

  1. மிக்க நன்றி.
    எமது ஆக்கங்களுக்குக் களம் அமைத்து உதவும் வேட்டையே நீ வாழ்க...

    ReplyDelete
Previous Post Next Post