குவைத்தில் 2017 ஆம் ஆண்டு குவைத் தமிழ் மக்கள் மன்றத் தொடக்க விழாவில் சந்தித்த அன்புநிறைந்த சகோதரி திருமதி நசீமா அவர்கள் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார் என அறிந்தேன்.
இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜூவூன்.
அல்லா பெரியவன். மிகப்பெரிய தன்னம்பிக்கை நிறைச் செல்வி., தன் வாழ்நாளில் பல சோதனைகளைச் சந்தித்ததுடன், அவற்றை ஏற்றுக்கொண்டு, வாழ்ந்த காலம் முழுவதும் மன உறுதியுடன் வாழ்ந்து மறைந்த வீரமங்கை.
வேட்டை வார மின்னிதழுக்கு என்னை அறிமுகம் செய்து உலகளாவிய அளவில் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றுத் தந்து, மகிழ்ந்த அன்புநிறைந்த சகோதரியின் இழப்பு மன வருத்தமாக உள்ளது.
அவரது மண்ணறை விசாலமாகவும், பிரகாசிக்கவும்.,அவரது மறுமை வாழ்க்கைக்காகவும் இறைவனிடம் துஆ செய்வோம்...
அவரது இல்லத்தாருக்கு எங்கள் பிரபஞ்ச திருக்குறள் ஆய்வு அறவாரியத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
அஞ்சலி