விட்டத்தைக்காட்டி
கதைக்கப்பட்டது
ஊறும் எறும்புகளின்
சரிதங்கள்
பார்மிக் அமிலம்
போதுமென பசியோடே
தூங்கிவிடுகின்றன
சிறுமியின்
இலைப்பாதங்கள்
அரை சயனத்தில்
அன்னதானச்
சொப்பனத்தை
புலம்புபவளுக்கு
வரிசையாய்ச் செல்கிற
கட்டையெறும்புகளின்
வீறிட்ட அழுகைகள்
லேசுபட எதிரொலிக்கிறது
Tags:
கவிதை