எறும்பு கதை!

எறும்பு கதை!


விட்டத்தைக்காட்டி
கதைக்கப்பட்டது 
ஊறும் எறும்புகளின் 
சரிதங்கள்
பார்மிக் அமிலம் 
போதுமென பசியோடே 
தூங்கிவிடுகின்றன
சிறுமியின் 
இலைப்பாதங்கள்
 
அரை சயனத்தில்
அன்னதானச் 
சொப்பனத்தை
புலம்புபவளுக்கு
வரிசையாய்ச் செல்கிற 
கட்டையெறும்புகளின்
வீறிட்ட அழுகைகள்    
லேசுபட எதிரொலிக்கிறது






Post a Comment

Previous Post Next Post