Ticker

6/recent/ticker-posts

ஆசு மாறசிங்கவும் அவருக்கான நையாண்டியும்.

இஸ்லாத்துக்கு எதிராக எழுந்தவன் தெளிவு பெற்று நல்வழி அடைவான் அல்லது அவமானப் பட்டு நஷ்டமடைவான்.  இதுதான் வரலாறு.  ஆயினும் எதிரிக்கு நடந்த நாசத்தை அவமானத்தை கொண்டாடி மகிழ நபி ஸல் அவர்கள் வழிகாட்டியதாக நான் காணவில்லை.

எமது ஒவ்வொரு நவடிக்கையினதும்  Action, Reaction,impact என்ற பிரதிபலன் காணப்படுகிறது.

நாம் கெட்டவனை  கெட்டவனாக விட்டு விடுவதிலும் அவனை மிகக் கெட்ட ,வைராக்கிய  எதிரியாக  மாற்றிக் கொள்ளாத மதி நுட்பம் எமக்குத் தேவை.
இலங்கை பெரும்பான்மை மக்களின் மனோபாவம்,  இழிவான அரசியல், நீதி தடம் புரளும் யதார்த்தம்,  பக்க சார்பான தொடர்பு சாதனங்கள்  இவை பற்றிய தெளிவு இல்லாமல் நாம் துள்ளக் கூடாது.

அவர் குற்றவாலியோ இல்லையோ, நாளை நிரபரதி என்று நிரூப்பிக்கப் பட்டால் அதன் பின்னர் அவர் முஸ்லீம்கள் விடயத்தில் எப்படி நடந்து கொள்வார்? இவரை முஸ்லிம் விரோதிகள், வெளிநாட்டு சக்திகள் பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இருக்குமா?

எனவே இதன் பின்னர் ஆசு மட்டுமல்ல எவராக இருந்தாலும் சிந்தித்து நடந்து கொள்ள வேண்டும். இப்போது இனவாதிகலை சிங்கள மக்களே தோலுரிக்க போதுமானவர்கள்   நாம் பார்வையாளர்களாக இருந்தாலே போதும்.

Dr Ajmal hassan.



 


Post a Comment

0 Comments