
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆங்கிலத்தில் வெளியிடுவதால் மற்ற மொழிகளை சேர்ந்தவர்கள் சரியான முறையில் அர்த்தங்களை புரிய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக இந்திய மொழிகளில் தீர்ப்புகளை மொழி பெயர்க்க வேண்டும் என கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்தநிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடுவது தொடர்பான கருத்து தெரிவித்து பேசினார். இதற்க்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இந்த வீடியோவை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் கிடைக்க செய்வதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து, சந்திரசூட் பேசினார். இதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என ஆலோசனைகளை கூறியுள்ளார். இது பாராட்டத்தக்க முயற்சி. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்கள் பயனடைவர் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் டுவிட்டரை ரீ டுவிட் செய்த முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் கூறுகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்.
இதனோடு, உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த டுவிட்டர் பதிவு செய்துள்ளார்.I wholeheartedly welcome Hon'ble CJI's suggestion to make SC judgments available in all Indian languages. This along with our long-pending demand of allowing the use of State official languages in HCs will bring justice closer to the common people of our country. https://t.co/NA1G1Y4rQI
— M.K.Stalin (@mkstalin) January 23, 2023
SOURCE;asianetnews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments