Ticker

6/recent/ticker-posts

வலியறியா பாதம்!


பாதங்கள் வலியென்று 
சொல்லாத அளவிற்கு 
பாசம் தோல்மிது 
பரவியிருக்கிறது

பார்த்த புகைப்படங்களை
 எல்லாம் வணங்கி சென்ற 
சிறுமிக்கு
தள்ளுவண்டியில் கட்டப்பட்ட
கண்ணாடகளில் நூறு 
கடவுள்களின்
தரிசனம்

இரண்டு தெய்வங்களும்
 வணங்கி முடிகையில் 
நடைக்கதவை திறக்க
 வேண்டுகிறது 
உண்மைக் கடவுள்

தாங்கி நிற்பதால் என்னவோ 
தியாக உச்சத்தில் நிற்கிறார்கள் 
மகளை பெற்ற அப்பாக்களும்
பேத்திகளை சுமந்த தாத்தாக்களும்...

சே கார்கவி கார்த்திக்




 


Post a Comment

0 Comments