எங்க அணிக்கு வந்து கோப்பையை வாங்கிக் கொடுக்கும்படி கூறிய பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியின் ரசிகருக்கு தோனி சொன்ன பதில் சிஎஸ்கே ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் துபாயில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி அங்கு ரசிகர்களுடன் கலந்துரையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசிய ரசிகர் ஒருவர், தான் 16 வருடங்களாக ஆர்சிபி ரசிகராக இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். தாங்கள் சி.எஸ்.கே அணிக்காக 5 ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்திருப்பதாகவும், ஒரே ஒருமுறை ஆர்.சி.பி அணிக்கு வந்து ஐபிஎல் கோப்பையை வென்று தர வேண்டும் என்றும் தோனியிடம் உருக்கமாக கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த தோனி, ஆர்சிபி அணி சிறந்த அணி என்று பாராட்டினார். கிரிக்கெட்டை பொறுத்தவரை எல்லாமே திட்டமிட்டபடி நடைபெறுவதில்லை என்றும் கூறினார். ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்லும் அளவுக்கு சிறந்த வீரர்களை வைத்துள்ளதாகவும், ஆனால், வீரர்கள் காயம் காரணமாக சரியான நேரத்தில் விளையாட முடியாமல் போவதால் பிரச்னை எழுவதாகவும் கூறினார்.
MS Dhoni's response when one of the RCB fan asked Dhoni to come and support RCB to win a title.
— Johns. (@CricCrazyJohns) December 20, 2023
- This is 👏pic.twitter.com/mcvlfrMBwI
மேலும், சிஎஸ்கே அணியை விட்டு விலகி மற்றொரு அணி கோப்பையை வெல்வதற்கு தான் உதவினால், தனது ரசிகர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் கூலாக வினவினார். அத்துடன், தற்போதைக்கு சிஎஸ்கே அணியிலேயே தான் கவலைப்பட ஏராளமான விஷயங்கள் இருப்பதாகவும் தோனி தெரிவித்தார். தோனியின் இந்த பதிலை கேட்டு சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்கில் உறைந்துள்ளனர்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
விளையாட்டு