பாலியல் வன்கொடுமை புகார் : JSW குழுமத்தின் சஜ்ஜன் ஜிண்டால் மீது பாய்ந்தது வழக்கு!

பாலியல் வன்கொடுமை புகார் : JSW குழுமத்தின் சஜ்ஜன் ஜிண்டால் மீது பாய்ந்தது வழக்கு!

இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனங்களில் ஒன்றான பிரபல ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சஜ்ஜன் ஜிண்டால் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் தகவல் அறிக்கையின்படி, புகார்தாரரான 30 வயது பெண் கொடுத்த புகாரில் இந்த சம்பவம் கடந்தாண்டு ஜனவரியில் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரியில் எழுத்துப்பூர்வ புகாரைச் சமர்ப்பித்து, பின்னர் நீதிமன்றத்தை அணுகியதாகவும், அதனை விசாரித்த நீதிமன்றம், JSW குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சஜ்ஜன் ஜிண்டால் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.

CNBC-TV18-னிடம் பேசிய புகார்தாரர், ‘இந்தாண்டு பிப்ரவரி 16 அன்று நான் காவல்துறையை அணுகினேன். காவல்துறையிடம் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இறுதியில் நான் டிசம்பர் 5 அன்று நீதிமன்றத்தை அணுகினேன்’ என கூறினார். அதன் பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கு ஒரு நாள் கழித்து, அதாவது கடந்த 13ஆம் தேதி சஜ்ஜன் ஜிண்டால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், எஃப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் ஏதும் இல்லை என மும்பை காவல்துறை மறுத்துள்ளது.

புகார்தாரரின் அறிக்கைகளின் அடிப்படையில், சஜ்ஜன் ஜிண்டால் மீது 376 மற்றும் 354 உட்பட குறிப்பிட்ட ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

news18



 



Post a Comment

Previous Post Next Post