திருப்பி அடிக்க ஆரம்பித்த ரஷ்யா: 420 உக்ரைனிய வீரர்கள் கொன்று குவிப்பு

திருப்பி அடிக்க ஆரம்பித்த ரஷ்யா: 420 உக்ரைனிய வீரர்கள் கொன்று குவிப்பு


ரஷ்யாவுக்குள் (Russia) ஊடுருவி வரும் உக்ரைனிய (Ukraine) படைகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு தாக்குல்களை ரஷ்ய படைகள் மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், ரஷ்யாவிற்குள் ஊடுருவிய உக்ரைனிய வீரர்களில் 420 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அண்மையில் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் இராணுவம் புகுந்து எல்லை தாண்டிய தாக்குதல்களை தீவரப்படுத்தியது.

அதனை தொடர்ந்து, ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் 74 குடியிருப்பு பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருப்பதாகவும் என உக்ரைன் அறிவிப்பை வெளியிட்டது.

இவ்வாறானதொரு பின்னிணியில், குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைனிய வீரர்களுக்கும் ரஷ்ய படைகளுக்கும் இடையில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 420 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதேவேளை, குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகளால் ஏவப்பட்ட 4 ஏவுகணைகளை ரஷ்யா தாக்கி அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.   

ibctamil



 



Post a Comment

Previous Post Next Post