பிரிட்டனில் உள்நாட்டு கலவரம்; இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

பிரிட்டனில் உள்நாட்டு கலவரம்; இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது


முஸ்லிம்களையும் குடியேற்றவாசிகளையும் இலக்காக கொண்டு நடத்தப்பட்ட பிரிட்டன் உள்நாட்டு கலவரத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுள்ளனர். 

மேலும், 575 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது என்று பிரிட்டன் போலிஸ் தரப்பு தெரிவித்தது 

SOUTHPORT பகுதியில் மூன்று சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்த வேளையில் அதற்கு முஸ்லிம் குடியேற்றவாசிகள் தான் காரணம் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு பிரிட்டனில் உள்நாட்டு கலவரம் வெடித்தது. 

இங்கிலாந்து, வட அயர்லாந்து ஆகிய நாடுகளில் இந்த கலவரம் தீவிரமானது. இந்த கலவரத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டனின் தேசிய போலிஸ் மன்றம் தகவல் அளித்துள்ளது. 

2011ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பிரிட்டனில் வரலாறு காணாத உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

nambikkai



 



Post a Comment

Previous Post Next Post