"விபத்துக்குள்ளான விமானத்தில் ஏறத் தவறினேன், உயிர் பிழைத்தேன்" - உணர்ச்சிவசப்பட்ட ஆடவர்

"விபத்துக்குள்ளான விமானத்தில் ஏறத் தவறினேன், உயிர் பிழைத்தேன்" - உணர்ச்சிவசப்பட்ட ஆடவர்


பிரேசிலின் சாவ் பாவ்லோ (Sao Paulo) நகருக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த ஆட்ரியானோ ஆஸிஸ் (Adriano Assis) விமானத்தில் ஏறத் தவறியதால் உயிர் பிழைத்தார்.

அவர் உயிர் பிழைத்தது குறித்து பேட்டி ஒன்று கொடுத்தார்.

அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலானது.

"தாமதமானதால் விமான ஊழியர் ஒருவர் என்னை விமாத்தில் ஏற விடவில்லை. அவருடன் வாக்குவாதம் நடந்தது. ஆனால் அவர் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். அவர் மட்டும் தமது வேலையைச் செய்யாமல் இருந்திருந்தால் நான் இன்று இந்தப் பேட்டியைக் கொடுத்திருக்க இயலாது," என்றார் ஆட்ரியானோ.

விமானத்தில் பயணம் மேற்கொண்டவர்களில் தமக்கு எவரையும் தெரியாது என்றும் அவர் கூறினார்.

அந்த விமானம் பிரேசிலின் தென் மாநிலமான பரானாவிலிருந்து (Paraná) சாவ் பாவ்லோ நகருக்குச் சென்றுகொண்டிருந்தது.

அதில் பயணம் மேற்கொண்ட 61 பேர் மாண்டனர்.

seithi


 



Post a Comment

Previous Post Next Post